பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முதலமைச்சர் அவர்களின் சமூக வலைத்தளப் பதிவு

பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்!

நமது #DravidianModel-இல் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்!

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்!

சொல்லால் அல்ல, செயலாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் நம் முதலமைச்சர்.

போரில் கடுமையாக பாதிக்கப்பட்டு தாய்த் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் முகாம்களிலேயே புதிய வீடுகள் கட்டித் தந்து, மாத உதவித்தொகை முதல்,  திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வரை வழங்கி அவர்களுக்கு புதுவாழ்வு அளித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர். இலங்கையின் பொருளாதாரச் சூழலால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு வந்தவர்களுக்கும் அன்புக்கரம் நீட்டி அரவணைத்தது இன்றைய அரசு.

30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்தியக் குடியுரிமை. அதனை வழங்க வேண்டியது ஒன்றிய அரசு என்றாலும், குடியுரிமைச் சட்டத்தின் வழியே அதற்கான முயற்சிகளை சட்டரீதியாக மேற்கொள்ளும் இலங்கைத் தமிழர்களுக்கு துணை நிற்கிறது தமிழ்நாடு அரசு.

கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற தொடர் சட்டப் போராட்டத்தினாலும் நீதிமன்ற உத்தரவுகளாலும் 8 பேருக்கு குடியுரிமை கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், தகுதி உள்ள மற்றவர்களுக்கும் குடியுரிமை பெறுவதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இருக்கிறது திராவிட மாடல் அரசு. தாயுள்ளம்  என்பது ஆணுக்கும் உண்டு. அதை நம் முதலமைச்சரிடம் காணலாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.