திருச்சியில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை துவக்கம் !
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திருச்சி மாநகரம் காட்டூர், திருவெறும்பூர், பொன்மலை, பகுதிகள் மற்றும்
திருவெறும்பூர் தெற்கு, வடக்கு ஒன்றியங்கள் துவாக்குடி நகரம், கூத்தைப்பார் பேரூர் ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார் .
திருவெறும்பூர் நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குச் சென்று ‘ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும், திராவிட மாடல் அரசின் திட்டங்களையும்” எடுத்துரைத்து உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.
மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் தொகுதி பொறுப்பாளர் மணிராஜ் மாவட்டக் கழக நிர்வாகிகள் சேகரன் செங்குட்டுவன் பகுதிகழகச் செயலாளர்கள் நீலமேகம் தர்மராஜ் சிவா ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி கங்காதரன் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.