வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சந்தன மர கட்டைகள் ! பறிமுதல் செய்த காவல்துறை !
தேனி மாவட்டம் கூடலூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தன மர கட்டை குச்சிகள் பதுக்கி வைத்திருப்பதாக கம்பம் கிழக்கு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கூடலூர் அண்ணா நகர் தெருவை சேர்ந்த பாஸ்கரன் (வயது 44) இவர் வீட்டிற்கு கம்பம் கிழக்கு வனசரகர் பிச்சைமணி, கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டை சோதனை செய்தனர், அப்போது இரண்டு சாக்கு பைகளில் சந்தன மர கட்டைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
வனத்துறையினர் பதுக்கி வைக்கப்பட்ட 2 மூட்டை சந்தன மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் . சந்தன மர கட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான பாஸ்கரன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடதக்கது.
— ஜெய் ஸ்ரீராம்