ஆட்சியில் இல்லைன்னா, என்ன? உடனே ஓடி வந்த மாஜி !
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே கனமழையால் வீடு சுவர் இடிந்து விழுந்ததில் நர்சிங் படித்து வந்த மாணவி உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தங்கல் வெள்ளையாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த வீரமணி– ராதா தம்பதியினரின் மகள் பவானி (17). தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வீட்டின் சுவர் பலவீனமடைந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் கடுமையாக காயமடைந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த துயரச் செய்தியை அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று மாணவியின் இல்லத்துக்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 இலட்சம் நிதியுதவியை வழங்கினார்.
ஆட்சியில் இல்லாவிட்டாலும், எந்த பதவியும் இன்றி இருந்தபோதும், தனது சொந்த தொகுதி மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டவுடன் உடனடியாக சென்று உதவிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்களின் இந்த மனிதநேய செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.