ஆடிப் போய் விட்டோம் !
ஒருமுறை ஒரு பாராட்டு விழா. அந்தப் பாராட்டு விழாவில் என் பேராசிரியர் க.ப.அறவாணன் ஒன்று சொன்னார், ஆங்கிலத்தில் ஒரு தலைவனுக்கு ஐந்து விதமான குணநலன்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவை A-B-C-D E என்று வரிசைப்படுத்தப்படுகிறது”- என்று சொன்னார்.
A for ABILITY
B for BEAUTY
Cfor CLARITY
D for DIGNITY
E for EDUCATIVE
இவை ஐந்தும் அமையப் பெற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் என்று அவர் சொன்னார்.
இவ்வளவு பெரிய பாராட்டுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்று வியந்த போது கலைஞர் மேடைக்கு வந்தார்.
பேராசிரியர் அறவாணன் ஐந்து குணங்களைச் சொன்னார். A-B-C-D-E என்று வரிசைப்படுத்தினார். ஆறாவது எழுத்தை விட்டு விட்டார்.
அதுதான் F, F for Feeding. என்னை Feed செய்தவர் கள் #அண்ணா-வும், #பெரியார்-ரும் அதனால்தான் எனக்கு ஐந்து குணங்களும் வந்தன என்று சொன்னார்.
ஆடிப் போய் விட்டோம்.
தமிழில் ஒருவர் சொன்னால் திருப்பி அடிக்கலாம். ஆங்கிலத்தில் சொல்வதற்கு கூட திருப்பி அடிக்க முடியும் என்று நிரூபித்து அந்த சபையையே ஆக்கிரமித்துக் கொண்ட ஆற்றல் கொண்டவர் கலைஞர் அவர்கள்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.