அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அவைத் தலைவர் அய்யப்பன், இணைச்செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம்,
இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், ஐ.டி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்பாஸ், ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர், பீடி பிரிவு சகாபுதீன், பகுதி செயலாளர்கள் என்..எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா,அன்பழகன்,புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன்,ரோஜர் ,கலீல் ரகுமான், ஏர்போர்ட் விஜி ,கலைவாணன்,பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்ல மண்டி பெருமாள், பாலக்கரை சதர், ஐ.டி.பிரிவு மண்டல துணைச் செயலாளர் கிருஷாந்த், ஐ.டி பிரிவு மண்டல துணைத் தலைவர் ராதா வேங்கடநாதன், இளைஞர் அணிமாவட்ட துணைச் செயலாளர் டி.ஆர். சுரேஷ்குமார், வர்த்தகர் அணி மாவட்ட துணை செயலாளர் பிரபாகரன்,நிர்வாகிகள்.லாவண்யா செல்வராஜ்,வாழைக்காய் மண்டி சுரேஷ்,வக்கீல் சேது மாதவன்,சந்தோஷ் ராஜ்,புத்தூர் ரமேஷ்,நாகராஜன், மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வாக்காளர்கள் சேர்ப்பு முகாம்களில் புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும், திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும், எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







Comments are closed, but trackbacks and pingbacks are open.