மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி பட்டினி போராட்டம் !
தேனி மாவட்டம், உத்தம பானாயம், தேவாரத்தில் பாண்டியர் குல வணிகர் சங்கம் சார்பில் தேவாரம் முதல் கேரள மாநிலத்தை இணைக்கும் சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி 3 ஆம் கட்டமாக பட்டினி போராட்டம் நடைபெற்று வருகிறது.
தேவாரத்தில் இருந்து T. மீனாட்சிபுரம் வழியாக கேரளத்து இணைக்கும் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாக்கலூத்து மெட்டு மலைச்சாலையை அமைக்க கடந்த 44 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
ஆனால் , இதுவரை அடிக்கல் நாட்டப்பட்ட அச்சாலையை அமைக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் , அண்டை மாநிலமான, கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை நெடுங்கண்டம், பூப்பாறை போன்ற பகுதிகளுக்கு கூலி வேலைக்கு செல்லும் இப்பகுதி மக்கள் நாள்தோறும் 150 கிலோ மீட்டர் பயணம் செய்து திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் தேவாரத்தில் இருந்து T. மீனாட்சிபுரம் வழியாக 8 கிலோமீட்டர் சாக்கலூத்து மெட்டு இணைப்புச் சாலை மூலமாக கேரளத்திற்கு அரை மணி நேரத்தில் சென்று விடலாம்.
அதன்படி கடந்த 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசிதழில் சாலை அமைப்பதற்கான அனுமதியை வெளியிடப்பட்டது.
ஆனால் வனத்துறையினர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதற்கிடையே தேவாரம் அதை சுற்றிய 25 கிராம மக்கள் பயன்பெறும் சாக்கலுத்து மெட்டு சாலை அமைக்க வலியுறுத்தி தேவாரம் பாண்டியர் குல வணிக சங்கர் சார்பில் கடந்த மாதம் கண்டனம் ஆர்ப்பாட்டமும், 2 ஆம் கட்டமாக போராட்டமும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, இன்று மூன்றாம் கட்ட போராட்டமாக பட்டினி போராட்டம் நடைபெற்று வருகிறது.
— ஜெய்ஸ்ரீராம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.