மொழி, இனம், ஜாதி, மதம், நாடு கடந்த திருமணம்…
மொழி, இனம், ஜாதி, மதம், நாடு கடந்த ஒரு திருமணம் கடந்த 19.02.2026 அன்று திருச்சியில் நடைபெற்றது. பெரியாரியலாளரான திருவரங்கம் தோழர் கேசவனின் மகன் கிரண் கிஷோர் – மணமகள் சிங் யூன் ஜான் ஆகியோரின் திருமணம்தான் இது. மணப்பெண் தாய்வான் நாட்டைச் சேர்ந்தவர்.
மணப்பாறை, திருக்குறள் பயிற்றகப் புலவர் நாவை சிவம் அவர்கள், பார்ப்பனப் புரோகித மறுப்பு தமிழ்நெறித் திருமணமாக, திருக்குறள் நெறித் திருமணமாக மிகச்சிறப்பாக இதை நடத்தி வைத்தார். திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு கீழே வந்து பார்வையாளர் பகுதியில் இவர் அமர்ந்ததும் பலரும் வந்து திருமணமுறை மிகச்சிறப்பாக இருந்ததாக மகிழ்ந்து பாராட்டிச் சென்றனர்.
முழுமையான சுயமரியாதைத் திருமணமாக எவ்விதச் சடங்குகளுமற்ற திருமணங்களாக எல்லாத் திருமணங்களும் நடைபெற வேண்டும் என்பது நமது விருப்பமாக இருந்தாலும்கூட, அதுவரையிலுமான இடைக்கால ஏற்பாடாக எண்ணி இதுபோன்ற திருமணங்களைப் பெருமகிழ்வுடன் கொண்டாடலாம்.
மணமக்களுக்கு அன்பு வாழ்த்துகள்…
– அரசழிலன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.