நீண்டநாள் கனவு நிறைவேறிய தருணம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்ன சேலம் பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தை, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம். க.கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரை ஏ.ஜே. மணிக் கண்ணன், கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா. செந்தில்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ், துணைத் தலைவர் இரா.ராகேஷ், பேரூராட்சி உதவி இயக்குனர் முகமது ரிஜ்வான் உள்ளிட்டு பல்வேறு கட்சி சார்ந்த பிரதிநிதிகளும் அரசு அதிகாரிளும் பங்கேற்றனர்.
2011 – 2012 அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 20 இலட்சம் மதிப்பீட்டில் அப்போது உணவுத்துறை அமைச்சராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் பா.மோகன் இருந்த சமயத்தில், திறக்கப்பட்ட பேருந்து நிலையம் சிதிலமடைந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர முயற்சியினால் ரூ 199 இலட்சம் மதிப்பிட்டில் புதுப்பொலிவு கண்டிருக்கிறது.
–விஜயஸ்ரீபன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.