சாதி படுத்தும் பாடு !
மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக வடிவேலுவை மாமன்னன் பட இயக்குநர் அணுகி இருக்கிறார்… அதற்கு கொஞ்சம் யோசித்து சொல்கிறேன் என்று கூறிய வடிவேலு … தன் ஆஸ்தான இயக்குநரான சுந்தர் சியிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்…
வடிவேலுவிடம் இயக்குநர் சுந்தர் சி… உங்களுக்கு பொதுவான ஆளுனு ஒரு இமேஜ் இருக்கு எனவே அந்த சாதி வெறி கும்பலிடம் போயி சிக்கிக்காதீங்க என்று எச்சரித்து இருக்கிறார்… வடிவேலும் அதை ஆமோதித்தவராக… ஆமாண்ணே என்று அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்…
ஆனால் வடிவேலுவின் மேனேஜர்… வடிவேலுவிடம் … அண்ணே மாமன்னன் நல்ல கதையா இருக்கு… இந்த படத்துல மட்டும் நீங்க நடிச்சா உங்களுக்கு ஒரு புது அங்கீகாரம் கிடைக்கும் … இந்த படத்துல நடிங்க நிச்சயம் அது உங்களுக்கு நல்ல பேரு வாங்கித் தரும் என்று சொல்லி கட்டாயப் படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்…
இயக்குநர் மாரி செல்வராஜின் சாதி வெறியை சரியாக கணித்து சொன்ன இயக்குநர் சுந்தர் சி தான் வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் ஏ சி சண்முகத்தின் புதிய நீதிக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கிறார்….
இதில் என்ன நகைச்சுவை என்றால் … இயக்குநர் சுந்தர் சியும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகமும் ஒரே சாதி என்பது அவர்கள் இருவருக்கும் இப்போதுவரை தெரியாது….
— செந்தில்குமார்








Comments are closed, but trackbacks and pingbacks are open.