காலை 7 மணிக்கே பிரச்சார களத்தில் ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் ஆர்.மனோகரன்…!
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் ஆர் மனோகரன் தினமும் காலை 7 மணிக்கே பிரச்சாரத்தை தொடங்கிவிடுகிறார். ஏப்ரல்-11 அன்று அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம், திருச்செந்தூரை ஊராட்சி, ஜீயபுரம் கடைவீதி, பெரியகருப்பூர், சின்னகருப்பூர், மேக்குடி, கடியாக்குறிச்சி, அல்லூர் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் செல்லும் இடமெல்லாம் பெண்கள் அமோக ஆதரவை வழங்கி வருகிறார்கள் என அதிமுகவினர் பூரிப்பில் திளைக்கின்றனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பூனாட்சி, அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால், பாரதிய ஜனதா கட்சி ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் முரளிதரன், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைச்செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன், சாத்தனூர் வாசு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் வேட்பாளர் ஆர்.மனோகரனுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.