இரண்டு குழுக்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்துதல் BNS 196 ( IPC 153A).
கலகம் செய்த தூண்டுதல் BNS 192 (IPC 153).
அமைதியை குலைத்தல் பிஎன்ஸ் 352 IPC 504.
ஆபாச பேச்சு சைகைகள் bns 61 ipc 509.
கூடவே BNS 296 (b) IPC 294 (b) பொது இடத்தில் அசிங்கமாக பாட்டுப்பாடி திட்டி ரகளை செய்தல்.
இதனோடு bns 61 கிரிமினல் சதி அதுதான் ipc 120(b)
கூடவே வுமன் ஹராஸ்மெண்ட், Information technology act எல்லாம் இருக்கிறது. ஆனால் திரிஷா புகார் கொடுத்தது போலத் தெரியவில்லை.
கிரிமினல் சதியாம். கலகம் செய்தல் பகைமையை கூடுதல் பிறகு பொது இடத்தில் தண்ணி அடித்து ரகளை செய்யும் நபர்கள் மேல் போடும் bns 296 b.
இப்படியொரு காமெடியான வழக்கை நான் பார்த்ததில்லை. அவர் என்ன குற்றம் செய்ததாக அரசு சொல்கிறதோ அதற்கு வழக்கு போடட்டும். இதெல்லாம் என்ன?
மா லெ தோழர்கள், தலித் அமைப்பினர், மனித உரிமை, சூழல் செயல்பாட்டாளர்கள், சிறுபான்மை மக்கள் மீதெல்லாம் சகட்டு மேனிக்கு இந்த 153 A, கிரிமினல் சதி, கலகம் செய்தல் எல்லாம் போடப்பட்டு வாட்டி வதைக்கப்பட்டனர். எந்த அரசும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
எனவே பொதுவான நண்பர்கள் தமிழ் நாட்டில் அரசியல் வழக்குகள் எவ்வளவு அபத்தமாக போடப்பட்டு சாதாரண செயல்பாட்டாளர்கள் எப்படி முடக்கப்படுகின்றனர் என்பதை உணரட்டும்.
இது ஒரு நல்ல வாய்ப்பு.
— இரா. முருகவேள்







Comments are closed, but trackbacks and pingbacks are open.