மதுரையில் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு

0

மதுரையில் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு

 

மதுரை  மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் துணைஆணையர்செயல் அலுவலர்அருணாசலம் முன்னிலையில்  இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது.

உண்டியல் திறப்பின்போது  , திருப்பரங்குன்றம்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையர் செயல் அலுவலர்சுரேஷ்,  இத்திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு,மற்றும்  மேலூர் ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பேரவை அமைப்பினர் உள்பட சுமார் 330 நபர்கள் கலந்துகொண்டு உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ. 87,68,310  – (ரூபாய் எண்பத்தி ஏழு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து மூந்நூற்றி பத்து  மட்டும்), பலமாற்று பொன் இனங்கள்  540 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள்  725 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள்  292 எண்ணம் வரப்பெற்றுள்ளது எனகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.