பட்டியலின மக்களுக்கு ஆடு வளர்ப்பு மற்றும் தொகுப்பு வீடு மானிய கடன் வழங்காமல் மோசடி செய்த வங்கி !
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, டி. ஓவுலபுரம், அழகர் நாயக்கன்பட்டி, தேவாரம், லட்சுமி நாயக்கன்பட்டி பல்லவராயன் பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பட்டியலின மக்கள் கோவில் சுந்தரசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 14 பயனாளிகளுக்கு 2017 ஆம் ஆண்டு தாட்கோ மூலம் வட்டியில்லா கடன், ஆடு வளர்ப்பு மானிய கடன் வழங்கப்பட்டது.
இந்த கடனுக்கு ஆதிதிராவிட நலத்துறை அரசு தொகுப்பு வீடுகள், 14 பயனாளிகளின் தொகுப்பு வீடுகளை பத்திரப்பதிவு செய்து 2 லட்சம் ரூபாய் வீதம், 60,000 ரூபாய் மானியம், பயனாளிகளின் பங்குத்தொகை 10,000 ரூபாய் என மொத்தம் 1,30,000 ரூபாய் கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட்டது.
தற்பொழுது வேளாண்மை தொடக்க கூட்டுறவு சங்கங்களின் ஆடு வளர்ப்பு வாங்கிய கடன், அபராத வட்டி ரூபாய் என மொத்தம் 3 லட்சம் ரூபாய் என ஒவ்வொரு பயனாளிகள் கட்ட வேண்டுமென வங்கி அதிகாரிகள் ஆதி திராவிட நலத்துறையால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே சிந்தனை சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பட்டியலின மக்கள் 14 பயனாளிகளுக்கு 2017 ஆம் ஆண்டு வட்டியில்லா ஆடு வளர்ப்பு மானிய கடன், தொகுப்பு வீடுகளை பத்திர பதிவு செய்து மானியம் வழங்காமல் கடன் வழங்கி மோசடி செய்துள்ளது.
ஆனால், தற்பொழுது கடனை கட்டவில்லை என தொகுப்பு வீடுகளை ஜப்தி செய்யப்போவதைாகவும், அதனை உடனடியாக தடுத்து நிறுத்தி வீடுகளை மீட்டுத் தருமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங்கிடம், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை விடுத்தனர்.
— ஜெய்ஸ்ரீராம்.