மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பிய ”பீடி உற்பத்தியாளர் சங்கம்” !
திருநெல்வேலி தென் தமிழக பீடி உற்பத்தியாளர் சங்கம் சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்… அது என்னவென்றால், பீடிகள் மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியினை 28% சதவீதத்திலிருந்து 5% சதவீதமாகக் குறைக்கவும்.
கையினால் உற்பத்தி செய்யப்படும் பீடி உற்பத்தி நிறுவனங்களை குடிசைத் தொழிலாக அறிவிக்கவும் மத்திய நிதியமைச்சருக்கு கோரிக்கை அனுப்பியுள்ளது.

பீடிகளின் மீதான அதிக வரி விதிப்பால். உற்பத்தி செலவுகள் அதிகரித்து அதன் போட்டித் தன்மை தடுக்கப்படுவதுடன். கிராமப்புறங்களில் குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பெருமளவில் பாதித்து பீடி உற்பத்தி நிறுவனத்தின் நிலைத் தன்மையை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் குறிப்பாக தென் தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பீடி உற்பத்தி நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ள கோரிக்கைகளான பீடிகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST 28%) சதவிகிதத்திலிருந்து 5% சதவிகிதமாக குறைக்கவும்
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கையினால் உற்பத்தி செய்யப்படும் பீடித் தொழில் நிறுவனங்களை குடிசைத் தொழிலாக அறிவிக்கவும். கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களின் பெண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், நமது மாநில கிராமப் பொருளாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும். இந்தப் பாரம்பரியத் தொழிலை பாதுகாக்கவும் வலியுறுத்தியுள்ளார்கள்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.