வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இரத்தான முகாம்
உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் துளசி பார்மசி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
ரத்ததான முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி M.கிறிஸ்டோபர் தொடங்கி வைத்த போது எடுத்த படம் அருகில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் S. P.கணேசன், குற்றவியல் வழக்கறிஞர்க சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் P. V. வெங்கட், துணைத் தலைவர் வரகனேரி சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் எழிலரசி, கௌசல்யா உடன் இருந்தனர் . நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர் முகாமிற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.