விடுதி காப்பாளர் மீது வாகனம் ஏறி உடல் நசுங்கி பலி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, இருக்கன்குடி கோவிலில் தனியாருக்கு சொந்தமான தங்கும்  விடுதி காவலராக பணிபுரிந்து வரும், சாத்தூர் அணைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த  பேச்சிமுத்து (53) சம்பவத்தின் போது இரவு விடுதியின் வெளியே தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்,

இருக்கன்குடி கோவில்
இருக்கன்குடி கோவில்

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை ஏற்றி வந்த வாகனம் விடுதியின் அருகே நிறுத்துவதற்காக பின்புறமாக ஓட்டுனர் வாகனத்தை இயக்கியுள்ளார்,

Apply for Admission

பேச்சிமுத்து (53)
பேச்சிமுத்து (53)

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

அப்போது தரையில் படுத்திருந்த பேச்சிமுத்தை கவனிக்காமல் எதிர்பாராத விதமாக அவர் மீது வேன் பின்புற சக்கரம் டயர் ஏறி இறங்கியுள்ளது, இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக இருக்கன்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கமுதி பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் அரசன்  என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

—    மாரீஸ்வரன்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.