அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விடுதி காப்பாளர் மீது வாகனம் ஏறி உடல் நசுங்கி பலி !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, இருக்கன்குடி கோவிலில் தனியாருக்கு சொந்தமான தங்கும்  விடுதி காவலராக பணிபுரிந்து வரும், சாத்தூர் அணைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த  பேச்சிமுத்து (53) சம்பவத்தின் போது இரவு விடுதியின் வெளியே தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்,

இருக்கன்குடி கோவில்
இருக்கன்குடி கோவில்

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை ஏற்றி வந்த வாகனம் விடுதியின் அருகே நிறுத்துவதற்காக பின்புறமாக ஓட்டுனர் வாகனத்தை இயக்கியுள்ளார்,

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பேச்சிமுத்து (53)
பேச்சிமுத்து (53)

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அப்போது தரையில் படுத்திருந்த பேச்சிமுத்தை கவனிக்காமல் எதிர்பாராத விதமாக அவர் மீது வேன் பின்புற சக்கரம் டயர் ஏறி இறங்கியுள்ளது, இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக இருக்கன்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கமுதி பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் அரசன்  என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

—    மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.