” வெற்றி மிக அருகில் தான் இருக்கிறது”  நூல் வெளியீட்டு விழா!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தின் குளிர்மை சிற்றரங்கில் திரு.நந்தவனம் சந்திரசேகரனின் ” வெற்றி மிக அருகில் தான் இருக்கிறது”  நூல் வெளியீடு 04.05.25 அன்று  நடைபெற்றது.

திரு.நந்தவனம் சந்திரசேகரன் தன் ஏற்புரையில்  தன்னம்பிக்கை நூல்கள் எழுதுவதுதான் தனக்கு அதிகம் உற்சாகம் தருகிறது என்றார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இதுவரை 30 நூல்கள் எழுதியுள்ள அவர்,  தான் எழுதிய, ” வாங்க மனம் விட்டு பேசலாம்” புத்தகம் மணவாழ்வில் இருந்து பிரிய  இருந்த ஒரு தம்பதியை சேர்த்து வைத்ததாகக் கூறினார்.

" வெற்றி மிக அருகில் தான் இருக்கிறது" நூல் வெளியீடுமுன்னதாக நவநீதா பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் திரு. பிரதீப் நூலை வெளியிட திரு. முகமது ஷபி பெற்றுக் கொண்டார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திரு.ஜனனி அந்தோணி ராஜ் வரவேற்புரை ஆற்ற, நித்யா கோபாலன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் திரு.இந்திரஜித் தலைமையுரை ஆற்ற , ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது ஷபி, பாட்சா பிரியாணி  உரிமையாளர் திரு. அபூபக்கர் சித்திக் ,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கல்வியாளர் திருமதி ஜெயலஷ்மி நூலின் தலைப்பை சிலாகித்து,   இது பெயர் அல்ல…பெருமை என்றார். திரு.யோகநாதன்  நன்றி நவில விழா இனிதே நிறைவடைந்தது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.