ஸ்ரீரங்கம் காணாமல் போன சிறுவன் உயிரிழப்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கும் சிறுவன் தினமும் தனியாக கொள்ளிடம் ஆற்றில் குளிக்க செல்லும் பழக்கம் உள்ளவன் – அதுவும் அதிக நேரம் அங்கே குளித்து விட்டு – அருகில் இருக்கும் நண்பர்களிடம் – எனது கண்களை பாருங்க ரெண்டு மணிநேரம் குளித்தேன் சிகாப்பாக ஆகி விட்டது என்று அப்பாவிதனமாக சொல்ல கூடியவன் .
இன்று மாலை கொள்ளிடம் ஆற்றில் நிறைய ஊறிய சடலம் கிடைத்ததாக தகவல் வர – சென்று பார்த்த அவனது பெற்றோர் இது எனது பிள்ளை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். சிறுவனின் சிகை (குடுமி) பூணூல் – இவைகளை கொண்டும் ஸ்ரீரங்கம் பகுதியில் காணாமல் போனது இவன்தான் என்று ஊகிக்க முடிகிறது ..

இவனை தினமும் கண்டு பேசி பழகிய -சிறுவன் வசிக்கும் சத்திரம் அருகில் வேலைசெய்யும் ஒரு வாலிபர் – நேரில் சென்று அந்த பிரேதத்தை கண்ட பின அது அந்த சிறுவனுடையது என்று நிச்சயமாக கூறுகிறார் ..
அந்த சிறுவன் அவனது தந்தையாருடன் வாழ்ந்த சத்திரம் – ஸ்ரீநிவாஸ், த/பெ. மதுசூதன் – ரங்கஜி மந்திர் 207, கீழ உத்தர விதி ஸ்ரீரங்கம்..
எங்கோ வடநாட்டில் அயோத்தியில் பிறந்து ஸ்ரீரங்கம் வட திருக்காவேரி (கொள்ளிடம் ) ஆற்றில் மூழ்கி அரங்கன் அடி சேர்ந்து இருக்கும் சிறுவன் ஆன்மா அவனது திருவடி நிழலில் இளப்பாரட்டும்
— விஜயராகவன் கிருஷ்ணன்