விஷமத்தனமான பிரச்சாரம் செய்யும் இது போன்ற சேனல்களை- குழந்தைகள்_எச்சரிக்கை
வீடியோ லிங்
அந்த நிகிழ்ச்சியில் வடமாநில கோயில் ( பூரி ஜெகநாதர்) வடிவமைப்பு காட்டப்படுகிறது . அந்த கோயிலுக்கு காவி வேடமிட்டு வரும் வில்லன் கதாபாத்திரம் , திடீரென காவி ஆடைகளை களைந்துவிட்டு , ” என் பெயர் மஃதின் கான் ” நான் கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்க போகிறேன் என வசனம் பேசிவிட்டு , பூநூல் போட்டு, கொண்டை போட்டு , பெண்களை விட அதிகமாக நகையும், நளினத்தோடும் , இருக்கும் கோயில் அய்யரையும் , பளிச்சென நெற்றி பொட்டு வைத்திருக்கும் ராஜாவையும் கைது செய்து, பிடித்து சிறையில் வைக்கிறான்.பிறகு கடவுளின் உதவியோடு நெற்றியில் நாமம் போட்டு இருக்கும் வைணவ மதத்தை சேர்ந்த சிறுவன் எதிரிகளை வீழ்த்தி , இந்து கடவுள்களை காப்பாற்றுவது போலக் கதைச் சித்திரம் உள்ளது.
இந்த நாட்டில் , மண்ணில் பிறந்து தங்களுக்கு பிடித்த கடவுளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வரும் சக மனிதனை தீவிரவாதியாக , திருடனாக , வில்லனாக , சித்தரித்து அதனை பால் மணம் மாறாத குழந்தைகளின் மனதில் விஷமாக விதைத்தால் , அதை பார்த்து வளரும் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேரும் போது , தெருவில் விளையாடும் போது , பொது இடங்களில் செல்லும் போது மாற்று மதத்தை சேர்ந்தவர்களை எந்த கண்ணோட்டத்தில் பார்த்து வளர்வார்கள் ? இது ஆரோக்கியமான சமுதாயத்தை வளர்த்து எடுக்குமா ?!