குருப்-I தேர்வுக்கான சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இலவசபயிற்சிவகுப்புகள்
இலவசபயிற்சிவகுப்புகள்

இனிய ரமலான் வாழ்த்துகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆண்டு திட்ட நிரலின்படி, துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப்-I முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பாணை 2025 ஏப்ரல் மாதத்தில்  வெளியிடப்படவுள்ளது. இத்தேர்வினை போட்டித்தேர்வாளர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருச்சிமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.03.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிஅளவில் துவங்கப்படவுள்ளது.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

மேற்கண்ட பயிற்சி வகுப்பில், சிறந்த பயிற்றுநர்களை கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள்; நடத்தப்பட்டு இலவசமாக பாடக் குறிப்புகளும் வழங்கப்படும். ஆகவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வாளர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901,9499055902 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நல்வாய்ப்பினை போட்டித்தேர்வாளர்கள் அனைவரும் பயன்படுத்தி வெற்றி பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.