உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளியில் 14.05.2025 மற்றும் 16.05.2025 ஆகிய நாட்களில் மத்தியபேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.
திருச்சிராப்பள்ளியில் உள்ள அரசு, மாநகராட்சி, ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024ம் கல்விஆண்டில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்கள் மற்றும் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 3658 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உயர்கல்வி படிப்பைத் தொடர தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் வகையில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 14.05.2025 மற்றும் 16.05.2025 ஆகிய நாட்களில் மத்தியபேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களான திருச்சி நகரம், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி மற்றும் அந்தநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு ட்பட்ட அரசுபள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி 14.05.2025 அன்றும், இலால்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களான இலால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம், உப்பிலியபுரம் மற்றும் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசுபள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி 16.05.2025 ன்றும் நடைபெறவுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தவாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள இக்கல்லூரிக் கனவு முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமாா், இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.