கோவில்பட்டி அருகே கண்மாயில் கட்டிட தொழிலாளி வெட்டி கொலை – போலீசார் விசாரணை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செண்பகப்பேரி கிராமம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செண்பகராஜ் என்பவருடைய மகன். இவர் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இன்று காலையில் வழக்கம்போல காலை கடன்களை முடிப்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள கண்மாய்  பகுதிக்கு சென்றுள்ளார். வெளியே சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த பாண்டிராஜ் குடும்பத்தினர் அவரைத் தேடிப் பார்த்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டபாண்டியராஜ்(25)
கொலை செய்யப்பட்ட பாண்டியராஜ்(25)

 

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

அப்போது கண்மாய் பகுதியில் வெட்டு காயங்களுடன் பாண்டியராஜ் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பாண்டிராஜ் உடலை கைப்பற்றி  உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தினை  கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Apply for Admission

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோத காரணமாக இந்த கொலைச் சம்பவம் நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

காலைக்கடன்களை முடிக்கச்  சென்ற கட்டிட தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

—-   மணிபாரதி

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.