காண்டான காக்கி – ரூல்ஸ் காட்டிய நடத்துனர் : கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் போக்குவரத்து கழகம் அதிரடி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காண்டான காக்கி ரூல்ஸ் காட்டிய நடத்துனர் : கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் போக்குவரத்து கழகம் அதிரடி !நெல்லையில் ஓசியில் டிக்கெட் கேட்ட காவலரை இறக்கி விட்ட நடத்துனர்.! நீ யாராக இருந்தால் எனக்கென்ன ? டிக்கெட் எடு! என நடத்துனர் மற்றும் போலீஸ் வாக்குவாதம் செய்து வீடியோ வைரலான நிலையில் காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை அதிகாரிகள் தற்போது விளக்கமளித்துள்ளனர்

நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார்.

Sri Kumaran Mini HAll Trichy

போக்குவரத்துதுறை
போக்குவரத்துதுறை

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது தொடர்பாக அரசு போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

அதன்படி, “காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.

இந்த நிலையில், நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்து நருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க போக்குவரத்து சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

– கேஎம்ஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.