கரூர் மாவட்டத்தில் டெங்கு…

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கரூர் மாவட்டத்தில் டெங்கு…கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி பஞ்சாயத்து… திருச்சாப்பூரை சேர்ந்தவர்
ஆசிர்வாதம் மகள் அமுல் மேரி வயது 56. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் உடம்பு உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அவரை கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு உறவினர்கள் திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு டெங்கு இருப்பதை உறுதி செய்தார். இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சம்பவம் அறிந்து அங்கு சென்ற சுகாதார அலுவலர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்ட அமுல் மேரி வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் பொய்யாமணி பஞ்சாயத்து பகுதியில் நேற்று முன்தினம் புகை மருந்து அடித்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையில் டெங்கு..
தடம் பதித்தது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

என்ற செய்தி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதோடு முன்கூட்டிய மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.