வி.சி.க. – பா.ம.க. : என்ன முடிவெடுக்கப்போகிறது திமுக ?
விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சியை திமுக கூட்டணிக்குள் அனுமதித்தால் வி.சி.க கையாலாகாத அடிமைக் கட்சி ஆகி விடும்.
திமுக, பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்குள் சேர்க்காவிட்டால், அது கையாலாகாத கட்சியாகி விடும்.
அந்தப் பக்கம் போனால், பறையர் சமூக வாக்குகள் திமுகவுக்குக் கிடைக்காது. இந்தப் பக்கம் போனால், வன்னியர் சமூகத்தின் வாக்குகள் திமுகவுக்குக் கிடைக்காது.
எல்லாம் சரி. ஆனால், இதுதானே கடந்த மூன்று நூற்றாண்டுகளின் அரசியல். இதைத் தாண்டித்தானே நாம் வர வேண்டியிருக்கிறது. ஏனெனில், இப்படி ஒரு இல்லாத மாய வெளியைத் தானே பார்ப்பனியம் கட்டமைத்து வைத்திருக்கிறது.
இதைத்தானே, இந்த அண்ணன் தம்பி சண்டையைத் தானே ஆர்.எஸ்.எஸ் கும்பல் விரும்புகிறது. இதைத்தானே பாரதிய ஜனதாவின் வழியாக இந்திய சமூகத்தில் நிலைநாட்டி இருக்கிறது பார்ப்பனியம்.
திராவிட விடுதலைப் போராளியான தளபதியார் அவர்களும், தலித் விடுதலைப் போராளியான திருமாவளவனார் அவர்களும் இதற்கு எப்படி பார்ப்பனிய சிந்தனைத் தொகுப்பை உடைத்து வழி காண்கிறார்கள் என்று பார்ப்போம்.
தேர்தல் களம் இப்போதுதான் சூடு பிடித்து அதே பழைய பஞ்சாங்கப் பாட்டை வந்தடைந்திருக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம். கறி விருந்து முடிஞ்ச பின்னாடி குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் எலும்புகளுக்குத் தானே நாம் சண்டை போடுகிறோம்.
இதுல திமுக என்ன? விசிக என்ன? எல்லாம் கிருஷ்ணார்ப்ணம். ஜண்டா மாருதம் தான். கடந்த இருந்து வருஷமா “சதி” செய்யப்பட்ட வன்னியர் – பறையர் பஞ்சாயத்துக்கே நம்ம இன்னும் தீர்வு கண்டுபிடிக்கல. இதுல வேற கீழடி, மேலடின்னு போங்கய்யா அங்கிட்டு !
— கை.அறிவழகன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.