என்னை ஏமாற்ற பெரிய திட்டம் எல்லாம் போடவேண்டாம் !
”என்னை ஏமாற்ற பெரிய திட்டம் எல்லாம் போடவேண்டாம்” என்பதாக குறிப்பிட்டு, மதிமுகவின் துணை பொதுச்செயலர் திருச்சியை சேர்ந்த டாக்டர் ரொஹையாவின் முகநூல் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் மதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காத்திருந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்தே அவர் இந்த பதிவை எழுதியிருப்பதாக கருதப்படுகிறது.
அவரது முகநூல் பதிவில், “சதுரங்க வேட்டை ! என்னை ஏமாற்ற பெரிய திட்டம் எல்லாம் போடவேண்டாம். என் மீது அக்கறை இருப்பது போல் கொஞ்சம் நடியுங்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஏமாந்து விடுவேன்.
பல துரோகங்களை சந்தித்த பிறகும் நான் உறுதியாக இருக்கிறேன். யாரிடமும் ஏமாறாமல் வாழும் வாழ்க்கையை விட யாரையும் ஏமாற்றாமல் வாழும் வாழ்க்கையை சிறந்தது என்று. இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல ….கொஞ்சம் மனசாட்சியுடன் வாழ முயற்சி செய்யுங்கள்.” என்பதாக தனது மன வேதனையை அவர் பதிவு செய்திருக்கிறார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.