தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக …
அரசுத்துறைகளில் என்றில்லை. தனியார் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டு இன்று இலஞ்ச – ஊழல் இல்லாத இடம் எதுவுமில்லை என்ற அளவுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தொழில்துறையில் இத்தகைய ஊழல் கலாச்சாரத்தை ஒழித்து, வணிகத்தில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் உருவாக்கும் நோக்கத்தில், இயங்கிவரும் அமைப்புதான் இலஞ்ச எதிர்ப்பு மேலாண்மை அமைப்பு (Anti-Bribery Management System – ABMS). தொழில்துறையினர் மத்தியில் 16 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையான தரமதிப்பீட்டு நிறுவனமாக இயங்கிவரும் இவ்வமைப்பு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலை (ISO 37001) சான்றுகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், ரோட்டரி இண்டர்நேஷனலின் இயக்குநர்களில் ஒருவரும், துணை இயக்குநர்களில் ஒருவரும், திருச்சியை சேர்ந்த தொழிலதிபருமான எம்.எம்.எம். முருகானந்தம் அவர்களை தலைவராக கொண்டு இயங்கிவரும், தமிழகத்தின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான எக்ஸெல் குழுமத்தின் எக்செல் மேரிடைம் & லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ISO 37001:2016 லஞ்சத் தடுப்பு மேலாண்மை அமைப்பு (ABMS) சான்றிதழைப் பெற்ற முதல் மற்றும் ஒரே லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.