சாத்தூர் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு – எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சாத்தூர் வைப்பாற்றில் நீர் வரத்து திடீரென அதிகரித்ததால், ஆற்றங்கரைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பாடும் நிலை உருவாகியுள்ளது.

மேல்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், வைப்பாற்றில் தற்போது சுமார் 500 கனஅடி நீர் பாய்ந்து வருகிறது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வைப்பாற்றில் வெள்ளப்பெருக்குஇந்த நிலையில், சாத்தூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, ஆற்றங்கரைக்கு செல்லவோ கூடாது” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் தயார்நிலையில் உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

 —  மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.