அங்குசம் பார்வையில் ‘கேங்கர்ஸ்’
தயாரிப்பு : ‘அவ்னி சினிமேக்ஸ்’ குஷ்பு சுந்தர் & பென்ஸ் மீடியா ஏ.சி.எஸ்.அருண்குமார். டைரக்ஷன் : சுந்தர் சி. நடிகர்—நடிகைகள் : சுந்தர் சி., ‘வைகைப்புயல்’ வடிவேலு, கேத்தரின் தெரசா, வாணி போஜன், பக்ஸ்[எ] பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி, மைம் கோபி,அருள்தாஸ், சந்தானபாரதி, காளை, விச்சு [ எ] விஸ்வநாதன், மாஸ்டர் பிரபாகர், மதுசூதன் ராவ், முனீஸ்காந்த், சிறப்புத் தோற்றம் ; விமல், ஒளிப்பதிவு : கிருஷ்ணமூர்த்தி, இசை : சி.சத்யா, எடிட்டிங் : பிரவீன் ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் : குருராஜ், ஸ்டண்ட் டைரக்டர் : ராஜசேகர், நடனம் : பிருந்தா, தீனா. பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எய்ம் ].
நெல்லை அரசன்கோட்டையின் அக்கிரம ராசாக்களாக இருக்கிறார்கள் மைம் கோபி & அருள்தாஸ் பிரதர்ஸ். இவர்களுக்கு அமைச்சர் மதுசூதன் ராவின் ஆசி இருப்பதால் எல்லா இல்லீகல் வேலைகளையும் துணிச்சலாக செய்கிறார்கள். அந்த ஊரின் அரசுப்பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவி காயத்ரி என்பவர் திடீரென காணமல் போகிறார். லோக்கல் போலீசில் கம்ப்ளெய்ண்ட் பண்ணியும் பிரயோஜனம் இல்லாததால் நெல்லை கமிஷனிடம் இமெயில் மூலம் கம்ப்ளெய்ண்ட் பண்ணுகிறார் அந்தப் பள்ளியின் ஆசிரியை கேத்தரின் தெரசா. அதன் பிறகு அந்தப் பள்ளியிக்கு பி.டி.மாஸ்டராக வருகிறார் சரவணன் [சுந்தர் சி.] அப்பவே தெரிஞ்சு போச்சு, இவர் தான் வில்லன்களுக்கு ஆட்டம் காட்டப்போகும் கேங்கர்ஸ் லீடர்னு.
அதே பள்ளியில் ஏற்கனவே இருக்கும் பி.டி.மாஸ்டர் சிங்காரம் [ வைகைப்புயல் வடிவேலு ] கேத்தரின் தெரசாவை ஒன்சைடாக லவ் பண்ணுகிறார். ஆனால் எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை. இடையிடையே சுந்தர் சி. தனது முகத்தை மறைத்துக் கொண்டு, வில்லன்களை பெண்டு நிமிர்ந்துகிறார். இவர் பெண்டு நிமித்தும் போதெல்லாம் வடிவேலுவை தூக்கிக் கொண்டு போய் பெண்டு நிமிர்த்துகிறது மைம் கோபி டீம்.
சரி க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும் ? எப்படி இருக்கும்னா… சுந்தர் சி. ஃபார்முலாப்படி எப்படி இருக்குமோ? அப்படித்தான் இருக்கும்? ஃபுல் & ஃபுல் எண்டெர்டெய்ன்மெண்ட் காமெடி க்யாரண்டியுடன், வைகைப்புயல் சப்போர்ட்டுடன் களம் இறங்கியிருக்கார் சுந்தர் சி. ஆனால் இடைவேளை வரை சில சீன்களைத் தவிர, தியேட்டரில் சிரிப்புச் சத்தம் கேட்கவேயில்லை என்பது தான் உண்மை.
இதற்கு முக்கியக் காரணம் வைகைப்புயலுக்கு வைத்த சுருள்முடி டோப்பாவும் ‘எல் பெண்ட்’ பென்சில் மீசையும் தான். முன்னமாதிரி பாடிலாங்குவேஜும் டயலாக் மாடுலேஷனும் புயலுக்கு ஒர்க்-அவுட் ஆகவில்லை என்பது பல சீன்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. அதையும் மீறி சந்தானபாரதி, முனீஸ்காந்த், அருள்தாஸ், மைக் கோபி ஆகியோரை நக்கல் டயலாக்குகளால் போட்டுத் தாக்கி சமாளிக்கிறார். ஆனால் இடைவேளைக்குப் பின் ‘கேங்கர்ஸ்’ டீமில் மும்பை சார்லஸாக எண்ட்ரியான பின் அதகளம் பண்ணுகிறார் வைகைப்புயல்.
குறிப்பா சொல்லணும்னா, சிங்காரத்திற்கு சார்லஸ்னு பெயர் வைத்த பிறகு, “சார்லஸ்..சார்லஸ்..”னு சுந்தர் சி. கூப்பிட்ட, புயல் அவர்பாட்டுக்குப் போக, “யோவ் சார்லஸ்னு கூப்பிட்டா திரும்பிப்பார்க்கணும்யா” என சுந்தர் சி. சொன்னதும் “ஏம்பா பொறந்த குழந்தைக்கு பேர் வச்சு கூப்பிட்டாலே அது திரும்பிப் பார்க்க ஒன்றரை வயசாகும். இப்பதாம்பா நீ எனக்கு பேர் வச்சிருக்க. கொஞ்சம் லேட்டாத்தான் திரும்பிப் பார்ப்பேன்” என வடிவேலுவின் சரவெடி காமெடியால் தியேட்டரே கைதட்டி, வாய்விட்டுச் சிரித்த சீன் ஒண்ணு போதும் கேங்கர்ஸின் காமெடி க்யாரண்டிக்கு. மத்ததெல்லாம் எக்ஸ்பயர்டான க்யாரண்டி கார்டு தான்.
மற்றபடி அமைச்சர் மதுசூதன்ராவின் 100 கோடியை, அக்கிரம பிரதர்ஸிடமிருந்து ஆட்டையப் போடும் சுந்தர் சி.யின் பிளான், செத்துப் போன ஹரிஷ் பெராடியை உயிருடன் திரும்ப வரவைக்கும் போடும் பிளான், தியேட்டரில் ‘மதகஜராஜா’ படம் ஓடுவது இதிலெல்லாம் ஸ்கிரிப்ட் டெம்ப்ட்டுக்காக சுந்தர் சி & டீமின் மெனக்கெடல் தெரிகிறது. அது சரி, வில்லன் ஹரிஷ் பெராடியின் மோசமான மகன் கேரக்டருக்கு சூரின்னு பேர் வச்சுட்டீகளே சுந்தர் சி.சாரே?
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சுந்தர் சி. & வைகைப்புயல் கூட்டணியின் எவர்கிரீன் சினிமாக்களான ‘வின்னர்’, ’தலைநகரம்’, ‘கிரி’ யை மனதில் வைத்து ரொம்பவும் எதிர்பார்த்துப் போனால், கொஞ்சம் ஏமாற்றம் தான்.
‘கேங்கர்ஸ்’ கண்டினியூஸ்னு படம் முடிகிறது. எனவே ‘கேங்கர்ஸ்-2’ பெஸ்டாக இருக்கட்டும். நெக்ஸ்ட் இதே இடத்துல மீட் பண்ணுவோம்.
— மதுரை மாறன் .