விருந்து நிகழ்ச்சிக்கு கூரியரில் வந்த கஞ்சா கேக் ! சிக்கலில் தமிழக இளைஞர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருந்து நிகழ்ச்சிக்கு கூரியரில் வந்த கஞ்சா கேக் ! சிக்கலில் தமிழக இளைஞர்கள் !

தமிழகத்தின் தலைநகரான சென்னை நகரில் கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லெட் வரிசையில் தற்போது கஞ்சா கேக்கும் முதன்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. கஞ்சா சாக்லெட்டுக்கு மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியில் சென்னையில் வரவேற்பு இருந்ததால் கஞ்சா கேக்கையும் தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர்.

Kauvery Cancer Institute App

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

அப்போது அங்கிருந்த கூரியர் பார்சல் ஒன்றை கைப்பற்றினார்கள். அதை திறந்து பார்த்தபோது, 200 கிராம் எடையுள்ள கஞ்சா கேக் இருந்தது. இது அதிக விலையுள்ளது என்று கூறப்படுகிறது. இதை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கூரியர் பார்சலில் இதை கடத்தி வந்ததாக சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஏக்நாத் (வயது 39) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது, சென்னைக்கு தற்போது தான் முதன்முதலாக விற்பனைக்கு வந்துள்ளது என்றும், வடமாநிலங்களில் இதை சர்வ சாதாராணமாக விற்கிறார்கள் என்றும் தெரிவித்தனர். விருந்து நிகழ்ச்சிகளில் இதை பரிமாறுகிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கஞ்சா சாக்லெட், கஞ்சா கேக் போன்ற போதை பொருட்களை தடை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆந்திரா, பீகார், ஒடிசா, அரியானா, திரிபுரா ஆகிய மாநில டி.ஜி.பி.க்களுக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடிதம் எழுதியுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.