திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் உருவச் சிலை திறப்பு !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்  உருவச் சிலையை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.  திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

திருச்சியல் கலைஞர் திருவுருவ சிலை - முதல்வர் திறப்பு
திருச்சியல் கலைஞர் திருவுருவ சிலை – முதல்வர் திறப்பு

இந்த வார அங்குசம் வார இதழில்…

101 வது நிகழ்ச்சியாக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் கலைஞருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்பட்டது. இதனை முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

உடன் முதன்மைச் செயலாளர் கே. என். நேரு, கனிமொழி எம்பி ,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொண்டர்கள்... திரள
தொண்டர்கள்… திரள

இதைத்தொடர்ந்து திருச்சியில் சிலை திறக்கப்பட்டதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏக்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, மாநகர செயலாளர் மதிவாணன் ,பகுதி செயலாளர் நீலமேகம், கவுன்சிலர்கள் செந்தில், KKK கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு கலைஞரின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.