கல்லூரி மாணவர்களுக்கான கையெழுத்துப்போட்டி

0

மாவட்ட அளவில் கல்லூரிமாணவர்களுக்கான கையெழுத்துப்போட்டி

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறைச் சார்பாக மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கிடையான தமிழ் கையெழுத்துப் போட்டி நடைபெற்றது.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

ஒன்பது கல்லூரிகளைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அ.வளர்மதி, கெளரவ விரிவுரையாளர்களான முனைவர் கௌரி, முனைவர் சுந்தரபாண்டியன் நடுவர்களாக இருந்தனர் சிறந்த கையெழுத்துக்கான முதற் பரிசினைரூ 7000/- மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிஅஜிதாவும், இரண்டாம் பரிசினை ரூ5000/- தியாகராசர் கல்வியியல் கல்லூரி மாணவர் கார்த்திக் மூன்றாம் பரிசினை ரூ3000/- எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரி மாணவி காளீஸ்வரியும் பெற்றனர் மீனாட்சி கல்லூரி, முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முத்துராணி போட்டியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

போட்டிக்கான பிற ஏற்பாடுகளை முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் செய்தனர்.

-மதுரை ஷாகுல்

படங்கள் – ஆனந்த்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.