அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு: அசத்தல் அரசு கல்லூரி!

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 22 இல் 27.02.2026 அன்று வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் முனைவர் பி. சத்யா அவர்களின் வழிகாட்டுதலின்படியும் அறிவுறுத்தலின்படியும் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

இம்முகாமில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளை மேற்கொண்டன. மொத்தம் 22 நிறுவனங்கள் பங்கேற்றன. அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 22 மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு கலைக்கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“நான் முதல்வன்” திட்டம்முகாமின் மூலம் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்று பணிநியமன வாய்ப்புகளை பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பணிநியமன அறிவிப்புகளை வழங்கினர்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இந்நிகழ்வை நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. தணிகைமணி மற்றும் முனைவர் பா. ராம்குமார்  திறம்பட ஒருங்கிணைத்து நடத்தினர்.

இவ்வாறு நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.