தமிழக மக்கள் நல கட்சியின் கருத்தியல் கலந்தாய்வுக் கூட்டம்!
திருச்சி அருண் ஹோட்டலில் 27.01.2026 செவ்வாய் கிழமையன்று காலை 11.00 மணியளவில் கட்சியின் துணைத்தலைவர் யேசுதாஸ் தலைமையிலும், பொருளாளர் தாஸ்பிரகாஷ் முன்னிலையிலும் பொதுச்செயலாளர் ஆர். தனராஜ் அவர்களால் நடத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட செயலாளர் வேளாங்கண்ணி அவர்கள் கூட்டத்தின் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.
2026 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சியின் செயல்பாடுகள் குறித்த ஒற்றைக்கருத்தினையொட்டிய நிலையிலேயே கூட்டம் நடைபெற்றது.
வரும் சட்டமனறத் தேர்தலில் இரண்டு தனித்தொகுதிகள் உட்பட பதினோறு(11) தொகுதிகளில் நமது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம்
1.சங்கரன்கோவில் (தனி)–திரு. ரவி
2.வாசுதேவநல்லூர்(தனி)–திருமதி வீரலட்சுமி
விருதுநகர் மாவட்டம்
3.சாத்தூர்–திரு முத்துக்கண்ணு
மதுரை மாவட்டம்
4.திருமங்கலம்– திருமுருகன்
திருச்சி மாவட்டம்
5.லால்குடி–திரு.யேசுதாஸ்
ஈரோடு மாவட்டம்
6.ஈரோடு(கி)– திரு தவசியப்பன்
7.ஈரோடு(மே)– W. தாம்சன்பிரபு
கோவை மாவட்டம்
8.தொண்டாமுத்தூர்– திரு சின்ராஜ்
9.சூளூர்– திரு நெல்சன்
திருவாரூர் மாவட்டம்
10.மன்னார்குடி– திரு முத்துவேல்
திருப்பூர் மாவட்டம்
11.பல்லடம்–திரு தர்மராஜ்
மேலே கண்ட தொகுதிகளில் நமது வேட்பாளர்கள் நிற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இறுதி செய்யப்படாத நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் நிலையில் ஐந்து தொகுதிகள் உள்ளன.
1.அம்பாசமுத்திரம்
2.திருநெல்வேலி
3.திருவையாறு
4தஞ்சாவூர்
5.பேராவூரணி
அனைத்து மாவட்ட செயலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள தொகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் ஐந்துபேர் கொண்ட ஒரு தேர்தல் பணிக்குழுவை ஏற்படுத்தி அவர்கள் பெயர்களை பொதுச்செயலாளரிடம் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வரும் பிப்ரவரி மாதம் 10-14 தேதிகளில் இந்தப் பணிக்குழுவினரைச் சந்திக்க பொதுச்செயலாளர் நேரில் வருவதற்கான பயண ஒழங்குகள் செய்யப்பட்டு வருகிறது.
தேர்தல் தொடர்பான அனைத்து காரியங்களுக்கும் மாவட்ட செயலர்கள் பொதுச்செயலாளருடன் தொடர்புகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
— இரா. தனராஜ், பொதுச்செயலாளர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.