திருச்சி – குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
திருச்சியில் , தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞரின் நலன் கருதி திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நீதிபதிகள் எம். அனு சுருதி, வி.பரம்வீர், எஸ்.முகமது சுஹையில், எம்.விஜயா, எம். டார்வின் முத்து, எம்.எஸ்.சுப்பிரமணியன், வி.ஜெயமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வழக்கறிஞர்களுக்கு கபசுரர் குடிநீர் வழங்கினர். நிகழ்ச்சிக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை பி.சுரேஷ் தலைமை தாங்கினார் .
இதில் சங்க நிர்வாகிகள் சசிகுமார், பிரபு, கிஷோர் குமார்,விஜய் நாகராஜன், ஜானகிராமன், முருகேசன், ரங்கீலா, கௌசல்யா, எழிலரசி மற்றும் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் செய்திருந்தார்.