அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆறாயிரம் பேர் பங்கேற்ற காவேரி மாரத்தான் சொல்லும் செய்தி இதுதான் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஆறாயிரம் பேர் பங்கேற்ற காவேரி மாரத்தான் சொல்லும் செய்தி இதுதான் !

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, திருச்சி காவேரி மருத்துவமனையின் முன்னெடுப்பில் மாரத்தான் போட்டியை நடத்தியிருக்கிறார்கள். 10-வது ஆண்டாக அக்-05 அன்று நடைபெற்ற காவேரி மாரத்தானில் 21.1 KM அரை மரத்தான், 10 KM நேர ஓட்டம் மற்றும் 5K M மகிழ்ச்சி ஓட்டம் ஆகிய பிரிவுகள் இடம்பெற்றிருந்தன. இதில், உடற்பயிற்சி ஆர்வலர்கள், குடும்பங்கள், தொழில் முனைவோர் மற்றும் பிரமுகர்கள் என சுமார் 6000-க்கும் அதிகமானோர் உற்சாகத்தோடு பங்கேற்றனர்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

ஆறாயிரம் பேர் பங்கேற்ற காவேரி மாரத்தான்
ஆறாயிரம் பேர் பங்கேற்ற காவேரி மாரத்தான்

5KM மகிழ்ச்சி ஓட்டத்தை தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் அமைச்சர் கே.என். நேரு மற்றும் திருச்சி மாநகர மேயர் மு. அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 10KM நேர ஓட்டத்தை திருச்சி காவல் ஆணையர் N. காமினி, IPS தொடங்கி வைத்தார். 21KM அரை மரத்தான் நிகழ்வை, திருச்சி மாநகராட்சி ஆணையர் L. மதுபாலன், IAS மற்றும் காவேரி மருத்துவமனை இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். D. செங்குட்டுவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதனை தொடர்ந்து, அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆட்சியர் V. சரவணன், IAS வெற்றியாளர்களை கௌரவித்தார். அரை மாரத்தான் மற்றும் 10KM ஓட்டப் போட்டிகளில் ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் மொத்தமாக ரூ.3,00,000/- பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இது ஓட்டப்பந்தய வீரர்களை சிறப்பாக செயல்பட ஊக்குவித்தது.
மேலும், ஸ்டீட் சைக்கிள்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன. இது செயலில் ஆர்வம் காட்டும் வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் ஒரு அடையாளமாக அமைந்தது.
மாரத்தான் போட்டி ஆவலையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினாலும், உண்மையான வெற்றி ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களின் புற்றுநோய் தடுப்பு மற்றும் முன்கூட்டிய பரிசோதனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது இந்த காவேரி மாரத்தான்.

ஆறாயிரம் பேர் பங்கேற்ற காவேரி மாரத்தான்
ஆறாயிரம் பேர் பங்கேற்ற காவேரி மாரத்தான்

“10வது காவேரி மாரத்தான் நிகழ்வு சாதனைகளை முறியடிப்பது மட்டுமல்ல — தடைகளை முறியடிப்பதற்கும்; புற்றுநோய் விழிப்புணர்வுக்காக 6,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஒருங்கிணைந்து ஓடுவது உண்மையாகவே ஊக்கமளிக்கிறது. வெற்றியாளர்களை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், உண்மையான சாதனை சமூகத்தின் ஒற்றுமையான உறுதி — உடல்நலம், உடற்பயிற்சி மற்றும் முன்கூட்டிய கண்டறிதலை ஊக்குவிப்பது. இந்த முக்கிய நிகழ்வை சாத்தியமாக்கிய ஒவ்வொரு பங்கேற்பாளர், பிரமுகர், தன்னார்வலர் மற்றும் ஆதரவாளருக்கும் நன்றி.” என்பதாக, மாரத்தான் நிகழ்வின் நோக்கத்தை எடுத்துரைத்தார், காவேரி மருத்துவமனை இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். D. செங்குட்டுவன்.

ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்த காவேரி மாரத்தான் ஏற்பாட்டுக் குழுவினர், 10-வது காவேரி மாரத்தான் நிகழ்வை வெற்றிகரமாகவும், திருச்சி நகரத்தின் சமூக நல வளர்ச்சியில் ஒரு நினைவுகுறியாகவும் மாற்றிய அனைத்து ஆதரவாளர்கள், பிரமுகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு ஏற்பாட்டுக் குழு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்.

இரா.சந்திரமோகன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.