கிருஷ்ணகிரி – தனியார் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம்!!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்து, நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்று பக்தர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகில் உள்ள எட்டியம்பட்டி-லிருந்து செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு இன்று காலை 9 மணியளவில்  தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

தனியார் பேருந்து விபத்து
தனியார் பேருந்து விபத்து

இதில், 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள  புலியூர் பிரிவு ரோட்டில் (தீரன் சின்னமலை பள்ளி பகுதியில்)   பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

தனியார் பேருந்து விபத்து

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதில், டிரைவர் உள்பட  50-க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக  ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

— மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.