நல் முத்தாக வார்த்தெடுத்த முத்தரசநல்லூர் அரசு பள்ளி !

0

திருச்சி மாவட்டம், முத்தரசநல்லுர், அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற  மாணவன் ச.குருசரண்,  பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் துவாக்குடி, அரசு மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

அரசு மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளிகல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் கல்வித் திறனை மேலும் பட்டைத் தீட்டும் வகையில் செயல்படுகிறது மாதிரி பள்ளிகள். இந்த நல்வாய்ப்பை எட்டி பிடிக்கும் வகையில் அம்மாணவனை, ஊக்கப்படுத்தி கல்வி தரத்தில் தயார் படுத்திய முத்தரசநல்லூர் அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணி போற்றுதலுக்குரியது.

அங்குசம் சார்பில் வாழ்த்துக்கள்!

Leave A Reply

Your email address will not be published.