இயற்கை மருத்துவர் ஜி.கோபாலகிருஷ்ணன் 103 வது பிறந்த நாள் விழா!
இயற்கை மருத்துவர் ஜி.கோபாலகிருஷ்ணன் 103 வது பிறந்த நாள் விழா.
திருச்சி சுப்பிரமணியபுரம் கோனார் தெரு சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் இவர். பள்ளிக்கே செல்லாமல் பல மொழிகள் பேசக்கூடியவர். பொன்மலை ரயில்வே துறையில் ஒட்டுநர் மற்றும் எலெக்ட்ரிக்கல் பிரிவில் பணியாற்றி ஒய்வு பெற்றார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறையால் சென்னையில் 2013 ஆம் ஆண்டு நடந்த இளந்தமிழர் இலக்கிய பட்டறையில் 2.8.2013 அன்று தமிழ் மருத்துவர் என்ற தலைப்பில் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் பயிற்சி அளித்துள்ளார். இதனை பாராட்டி தமிழக அரசு இவருக்கு சான்றிதழும் வழங்கியுள்ளது.
![இயற்கை மருத்துவர் ஜி.கோபாலகிருஷ்ணன்](https://angusam.com/wp-content/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-24-at-12.18.32-PM-1.jpeg)
இவருக்கு 103 வது பிறந்த விழா சப்பாணிப்பட்டியார் சி.கந்தசாமி குடும்பத்தினர் சார்பில் க.சண்முகம் தலைமையில் கொண்டாட்டப்பட்டது. இதில் இவருக்கு பட்டு துணியில் வேஷ்டி, சட்டை மற்றும் ஆள் உயரம் மாலை, மாலை கீரிடம் அணிவித்து கேக் வெட்டி கொண்டாட்டபட்டது.
இவ்விழாவிற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், கார்முகில் புக் நிலையம் கார்முகில், செயல் மன்றம் தங்கவேல், பொன்மலை ரயில்வே பென்ஷன் சங்க செயலாளர் ராமசாமி, மகேந்திரன், மற்றும் நிர்வாகிகள். இயற்கை மருத்துவருவர்கள், ரயில்வே தொழிலாளர்கள் , மகன் வாசுதேவன் , கந்தசாமி சோழ திரையர் குடும்பத்தினர், பேரன், பேத்திகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தி, வணங்கி சென்றார்கள்