அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நியோமேக்ஸ் மோசடி வழக்கு -இது வரை புகார் கொடுத்தவர்கள் 667 பேர் – ஆனால் முதலீட்டாளர் 32,048 விசாரணை இன்னும் முடியவில்லை – அரசு தரப்பு வாதம் 

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நியோமேக்ஸ் மோசடி வழக்கு -இது வரை புகார் கொடுத்தவர்கள் 667 பேர் – ஆனால் முதலீட்டாளர் 32,048 விசாரணை இன்னும் முடியவில்லை – அரசு தரப்பு வாதம் 

நியோ மேக்ஸ் வழக்கில் இயக்குநர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பல நிர்வாகிகளால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உரிய நிவாரனம் வழங்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில்.விசாரனைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி ஓய்வு பெற்ற நீதிபதி.தலைமையிலான கமிட்டிக்கு.கடும்.எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.   .

நீதிபதி கமிட்டி அமைத்தால் காலதாமதமின்றி எல்லோருக்கும் விரைவாக பிரித்து கொடுத்து விடலாம் என நியோ மாக்ஸ் தரப்பில்.வைக்கப்பட்ட வாதத்தை சுட்டிகாட்டி 1999 ம் ஆண்டு அமைக்கப்பட்ட கமிட்டி முதல் பல்வேறு கமிட்டி இது வரை முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுக்காததை சுட்டிக்காட்டினார்.

யாவரும் கேளீர்

மேலும் நியோ மேக்ஸ் தாக்கல் செய்துள்ள பிரமான வாக்கு மூலத்தில் 32,048 முதலீட்டாளர்கள் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இங்கே புகார் கொடுத்த ஜெயசங்கரீஸ்வரனுக்கு 15,515 சதுர அடியும், 25 லட்சமும் கொடுத்துள்ளனர், என்பதனை அடிப்படையாக கொண்டு சராசரியாக கணக்கிட்டால்   32,048 முதலீட்டாளர்களுக்கு கொடுப்பதற்கு 49 கோடியே 72 லட்சம் சதுர அடி தேவைப்படுகிறது.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

neomax
neomax

ஆனால் அவர்கள் டி.டி.சி.பி அப்ரூவல் பெற்ற இடம் 5 கோடியே 9 லட்சம் சதுர அடி மட்டுமே உள்ளது. மேலும் இப்போது அவர்களிடம் இருக்கும் நிலத்தில் அடிப்படையில் 32,048 முதலீட்டாளர்களுக்கு அவர்கள் பிரித்து தருவதாக சொல்கிற 2 கோடியே 23 லட்ச சதுர அடியை சராசரியாக பிரித்து கொடுத்தால் ஒருவருக்கு 697 சதுர அடி தான் கொடுக்க முடியும். இதற்கு  முதலீட்டாளர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

மேலும் சட்டத்துக்கு புறம்பாக நீதிபதி கமிட்டி அமைக்க உயர் நீதிமன்றம் உத்தர விட முடியாது. புலன் விசாரனை முழுமை பெற வேண்டும், இது வரை பொருளாதார குற்றப்பிரிவில்  புகார் கொடுத்தவர்களின் எண்ணிக்கை 667 மட்டுமே, ஆனால் 32,048 பேர் முதலீடு செய்துள்ளார்கள் என நிறுவனமே உத்தேசமாக தான் குறிப்பிட்டுள்ளது.

மொத்தத்தில் எத்தனை முதலீட்டாளர்கள் என்பது முழுமையான புலன் விசாரனைக்கு பின்னரே தெரிய வரும். மேலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. எனவே நீதிபதி.கமிட்டி அமைத்தால், அது  மறைமுகமாக புலன் விசாரனையை பாதிக்கும் என குறிப்பிட்டார்.

உடனே நீதிபதி விசாரணையை அக்டோபர் 20ம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.