மனிதன் ஒருவனின் மரணத்திற்குப் பிறகும் சில உறுப்புகள் சில மணி நேரம் வரையில் உயிருடன் இருக்கும் தெரியுமா?
மனிதன் மரணமடைந்த பிறகும் உடலின் சில உறுப்புகள் உடனே செயலிழக்காது. சில உறுப்புகள் மற்றும் செல்கள் சில மணி நேரங்கள் வரை உயிருடன் இருக்கும் என்பது ஆச்சரியமான உண்மை!
கண்கள் : மரணத்திற்குப் பிறகு சுமார் 4–6 மணி நேரம் வரை செயல்படும் தன்மை இருக்கும்.
இதயம் : உடலிலிருந்து பிரித்த பிறகும் குறுகிய நேரம் துடிக்கும் திறன் இருக்கலாம்.
மூளை செல்கள் : சில நிமிடங்கள் வரை செயலில் இருக்கும்.
நுரையீரல் : சில மணி நேரங்கள் வரை மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும்.
கல்லீரல் : சுமார் 12 மணி நேரம் வரை பாதுகாக்க முடியும்.
சிறுநீரகம் : 24 மணி நேரம் வரை உயிருடன் பாதுகாக்கப்படலாம்.
இதனால் தான் உறுப்பு தானம் பலரின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது.“ஒருவர் மறைந்தாலும், அவரது உறுப்புகள் மற்றொருவருக்கு புதிய வாழ்க்கை தரலாம்.” நீங்கள் மட்டுமல்ல, உங்களை சுற்றி இருப்போரையும் உறுப்புதானம் செய்ய சொல்லலாமே!
– பேரா.சா.அருள்







Comments are closed, but trackbacks and pingbacks are open.