விவசாய நிலத்தில் விளையாட்டு மைதானம் – வீதிக்கு வந்த அகில இந்திய விவசாயிகள் மகாசபை !

0

விவசாய நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் குறிச்சி ஊராட்சியில் மூன்று தலைமுறையாக 90 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

இவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும் சேலம் மாவட்டம் குப்பனூர் ஊராட்சி வெள்ளியம்பட்டி கிராமத்தில் , அந்த பகுதி மக்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேலும் வெள்ளியம்பட்டி பகுதி சேர்வராயன் மலைத்தொடர் அருகில் அமைந்திருப்பதால் கோடை காலத்தில் தண்ணீருக்காக வனவிலங்குகள் வருவது வழக்கம்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அந்த இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டால் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளவர்கள் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் உறுப்பினர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, பலமுறை மனுக்கள் அலைக்கும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்பதால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அகில இந்திய விவசாயிகள் மகாசபை சேலம் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.