லேபிளை பறித்துக் கொண்டு 10 ரூபாய் திருப்பித்தர மறுப்பு ! சர்ச்சையில் தனியார் டாஸ்மாக் பார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அரசு விதிமுறைகளை மீறி அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் பாட்டிலில் உள்ள லேபிளை பறித்துக் கொண்டு பத்து ரூபாய் திரும்ப தராமல் தனியார் பார் உரிமையாளர் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் பூரிபுரம் பேரூராட்சி பகுதியில் அரசு விதிமுறைகளை மீறி அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் பாட்டிலில் உள்ள லேபிளை பறித்துக் கொண்டு 10 ரூபாய் திரும்ப தராமல் தனியார் பார் உரிமையாளர் மொக்கச்சாமி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

லேபிளை பறித்துக் கொண்டு 10 ரூபாய்
லேபிளை பறித்துக் கொண்டு 10 ரூபாய்

பூதிபுரம் பேரூராட்சி பகுதியில் அரசு மதுபான கடை எண் 8612 செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மொக்கைச்சாமி என்பவர் தனியார் பார் நடத்தி வருகிறார். அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் பாட்டிலில் உள்ள லேபிளை திரும்ப கொடுத்தால் பத்து ரூபாய் தர வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

ஆனால், பூதிபுரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில் உள்ள லேபிளை தனியார் பார் உரிமையாளர் மொக்கச்சாமி லேபிளை வாங்கிக்கொண்டு பாட்டிலுக்கு திரும்ப தரவேண்டிய பத்து ரூபாயை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, பாட்டிலில் ஒட்டப்பட்டுள்ள லேபிளை திரும்ப கொடுத்தால் தரவேண்டிய பத்து ரூபாயை குடிமகர்களிடம் திரும்பத் தராமல் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாட்டிலுக்கு திரும்ப பத்து ரூபாய் திரும்ப தர உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

—  ஜெய்ஸ்ரீராம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.