அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தஞ்சை மாவட்டத்தில்
9 இடங்களில்
NIA அதிகாரிகள் சோதனை

NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் தஞ்சை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே NIA அதிகாரிகள் 13 நபர்களைக் கைது செய்து, தலைமறைவாக உள்ள மேலும் ஐந்து நபர்களைத் தேடி வருகின்றனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இது தொடர்பாக ஏற்கெனவே பலமுறை சோதனை மேற்கொண்ட நிலையில், இன்று தஞ்சாவூர், கும்பகோணம், திருபுவனம், ராஜகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் NIA அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Admission Enquiry Form

தஞ்சை நடராஜபுரம் தெற்கு காலனியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த பக்ருதீன், கும்பகோணத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத், ராஜகிரி பகுதியைச் சேர்ந்த முகமது பாரூக், திருபுவனம் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோரின் வீடுகளில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.


இச் சோதனையில் NIA டிஎஸ்பி தலைமையில் இருபதுக்கு மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.