தென்காசியைத் தொடர்ந்து தேனியிலும் அதிரடி: சோதனைச் சாவடிகளில் ₹35 ஆயிரம் பறிமுதல்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தேனி மாவட்டம்  தமிழக எல்லையில் குமுளி, போடி, கம்பம் மெட்டு, சோதனை சாவடியில்  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. முந்தல் சோதனை சாவடியில் 3500, போடி மெட்டு சோதனை சாவடியில் 5790 ரூபாய் குமுளி சோதனை சாவடியில் 26460 மொத்தம் 35790 ரூபாய் பறிமுதல்.

தேனி மாவட்டம் தமிழகம் கேரளத்தை இணைக்கும் மாநில எல்லையாக குமுளி, போடி, கம்பம் மெட்டு  அமைந்துள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இங்குள்ள தமிழக போலீசார் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் பயணிகள் பேருந்துகள் என பல்வேறு வர்த்தக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக கேரள எல்லை உள்ள குமுளி, போடி, கம்பம் மெட்டு, சோதனை சாவடியில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார்,  ஆய்வாளர் பழனிச்சாமி, ராமேஸ்வரி, ரூபா கீதாராணி தலைமையில் கொண்ட குழுவினர் காலை முதலில் சோதனை மேற்கொண்டனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அப்போது முந்தல் சோதனை சாவடியில் 3500, போடி மெட்டு சோதனை சாவடியில் 5790 ரூபாய் குமுளி சோதனை சாவடியில் 26460 மொத்தம் 35790 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

அச்சோதனையில் வாகனங்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சோதனை செய்து வருகின்றன.

இதே போல தமிழகத்தின் கேரளத்தை இணைக்கும் பல்வேறு மாநில எல்லையிலும் சோதனையை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

முன்னதாக தென்காசி மாவட்டம் தமிழகத்தில் எல்லையில் புளியறையில் சோதனைச் சாவடியில் தமிழக போலீசார் லஞ்சம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

—  ஜெய்ஸ்ரீராம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.