பெண்கள் புற்றுநோய்-க்கு எதிராக ரோட்டரியின் சிறந்த முன்னெடுப்பு !
ரோட்டரி இன்டர்நேஷனலின் தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, பெண்களின் கருப்பப்பை புற்றுநோய் கண்டறிதலில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த சீரிய முன்னெடுப்பின் தொடர்ச்சியாக, மலேசியாவின் மலேசியாவின் D 3300 ரோட்டரியின் பங்களிப்புடன், உளகளாவிய மானியத்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தின் RI Dist 3231 ரோட்டரி மாவட்டம் இணைந்து, குடியாத்தத்தில் உள்ள அத்தி மருத்துவமனைக்கு பெண்கள் புற்றுநோய் பரிசோதனை மொபைல் யூனிட்டை (டிஜிட்டல் மேமோகிராபி பஸ்) ஒப்படைத்திருக்கிறார்கள்.

தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு முன்னெடுப்புகளை தீவிரப்படுத்திவரும், ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவரும், இயக்குநர்களுள் ஒருவரும், எக்ஸெல் குழுமங்களின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் இச்சேவையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
— கலிங்கா இளவழகன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.