தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை…!
திருச்சி முடுக்குப்பட்டி பகுதி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அங்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 25)என்பவரை கண்டோன்மென்ட் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து கைது செய்து உள்ளார். இதே போன்று அரியமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட
ஜெகநாதபுரத்தில்புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த அரியமங்கலத்தைசேர்ந்த செல்வகுமார் (வயது 42) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் மலையப்பன் வழக்குப் பதிந்து கைது செய்து உள்ளார். மேற்கண்ட 2 பேரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் ஜாமீனில் விடுதலை செய்தனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.