”மூடு டாஸ்மாக்கை!” – சாராயக் கடைக்கு எதிராக சேலம் மக்கள் போராட்டம்!

0

”மூடு டாஸ்மாக்கை!” – சாராயக் கடைக்கு எதிராக சேலம் மக்கள் போராட்டம்!

சேலம் சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (15.05.2023) அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

ஏற்கெனவே, இதே சீலநாயக்கன்பட்டியில் ஆறு டாஸ்மாக் சாராயக் கடைகள் இயங்கிவரும் நிலையில், மக்கள் எதிர்ப்பையும் மீறி தற்போது ஏழாவது கடையாக திறக்க கங்கணம் கட்டிக் கொண்டு இயங்கி வருகிறது, மாவட்ட நிர்வாகம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சேலம் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்
சேலம் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

தேசிய நெடுஞ்சாலை ஓரமாக; பள்ளிகள் அருகில்; குடியிருப்புகள் அருகில்; வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் அரசு டாஸ்மாக் சாராயக் கடைகளைத் திறக்கக்கூடாது என்று மக்கள் எதிர்ப்புகளையடுத்து பல்வேறு ”கூடாதுகளை” அரசுக்கு உத்தரவுகளாகப் பிறப்பித்திருக்கின்றன நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள்.

அவற்றையெல்லாம் கசக்கி கடாசிவிட்டுத்தான், அரசுப் பள்ளிக்கு மிக அருகிலும்; மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் குறிப்பாக, சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் திருமணம் மண்டபம் அருகில், 58-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கோபால் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் அமையவிருக்கிறது, இந்த எழவெடுக்கும் ஏழாவது டாஸ்மாக் சாராயக்கடை.

  • சோழன் தேவ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.